அமைச்சர்கள், நிர்வாகிகள் இன்று சிலைக்கு மரியாதை முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 89வது பிறந்தநாள்: மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் வேண்டுகோள்

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு, முரசொலி வளாக முகப்பில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள், திமுக முன்னணியினர் இன்று மாலை அணிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும், திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், ஒன்றிய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் கோடம்பாக்கம், முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக முன்னணியினர் மற்றும் அமைச்சர்கள் மலர்மாலை அணிவிக்கின்றனர்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள்,  முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், சார்பு மன்றம், படிப்பகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள், சார்பு மன்றம், படிப்பகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு சென்னை மாவட்ட திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: