ஈரோடு: தமிழகத்தில் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் திக்கைய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புத்தகத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. இதில் வீரமங்கை வேலுநாச்சியார் நாடகத்தை தொடங்கி வைத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாடகத்தை கண்டு கழித்தார். வேலுநாச்சியார் வரலாற்றை பறைசாற்றும் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் 60 கலைஞர்கள் பங்கேற்று, வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வரலாற்றை 1 1/2 மணி நேரத்தில் தத்ரூபமாக கண்முன் நிறுத்தினர்.