தமிழகம் நாகையில் அர்ச்சகர்கள் – பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி விநியோகம்!: எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி பயனாளிகளுக்கு வழங்கினர்..!! Jun 19, 2021 ஷாநவாஸ் நாகை மாலி நாகை இந்து அறக்கட்டளை தின மலர் நாகை: இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. நாகையில் கலைஞர் பிறந்தநாள் விழாவை ஒட்டி இந்து அறநிலையத்துறை சார்பில் 218 கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. நீலாயுத்தாட்சியம்மன் கோவிலில் நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி ஆகியோர் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. 132 பயனாளிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி ஆகியோர் நிவாரணம் மற்றும் உதவி பொருட்களை வழங்கினர். விழுப்புர மாவட்டம் மரக்காணத்தில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர். மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் காய்கறி, அரசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 100 பேருக்கு நிவாரணமாக அளித்தனர். தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரசி மற்றும் மளிகைப் பொருட்களை அளித்தனர். திருப்பதி திருமலா தேவஸ்தான தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இதனை வழங்கினார். இதேபோல சிவகாசி சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய, வாய் பேசாத, காத்து கேளாதோர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இளம் தொழில் முனைவோர் நிவாரண பொருட்களை வழங்கினர். … The post நாகையில் அர்ச்சகர்கள் – பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி விநியோகம்!: எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி பயனாளிகளுக்கு வழங்கினர்..!! appeared first on Dinakaran.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பில் 492 மார்க் பெற்ற மாணவியின் குடிசை வீட்டிற்கு 5 நாளில் இலவச மின் இணைப்பு: முதல்வருக்கு குடும்பத்தினர் நன்றி
கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் நெஞ்சுவலியில் துடிதுடித்த கண்டக்டர்: பயணிகளுடன் மருத்துவமனைக்கே டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றும் உயிரிழந்த பரிதாபம்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை: டெல்டாவில் விடிய விடிய வெளுத்தது; கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல்
நெல்லையில் எச்சரிக்கையையும் மீறி அலட்சியம்; சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் அதிரடி
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மோதல் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்: விடுதி வார்டன் கார் கண்ணாடி உடைப்பு
தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது சக மனிதனை பாகுபாடுடன் பார்ப்பது ஏற்புடையது அல்ல: ஐகோர்ட் கிளை கருத்து
‘சர்வதேச அனுமதி கிடைக்கவில்லை’ நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: நாளை மறுநாள் தொடங்கும் என நிர்வாகம் அறிவிப்பு
உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கு முழுமையான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு
வீட்டுவாசலில் விளையாடியபோது சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்: தாய், மகள் மீது வழக்குப்பதிவு
சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 2 பஸ்கள் மோதி மருத்துவர் உள்பட 4 பேர் பலி: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான அறிவுரை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்
குளறுபடிகளை சரி செய்து வருவாய் அதிகரிக்க வழிகாட்டி மதிப்பு திருத்த பணிகள் தீவிரம்: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் டெல்லி செல்ல தடை இல்லை: நாளிதழில் வெளிவந்த செய்திக்கு அரசு மறுப்பு
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்