புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக விடுதலையின் அமிர்த பெருவிழா என்ற பெயரில் ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி என்ற நிகழ்ச்சிக்கும் ஒன்றிய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மன் கி பாத் ரேடியோ உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி என்ற சிறப்பு பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. எனவே அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.