புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த ஏப்ரல் மாதம்தான் திறக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனால், மாணவர்கள் இடையே பரவல் அதிகரிப்பதை தவிர்க்க பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.