கார்கோன்: மத்தியப்பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், பால்வாடா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்கூட் காட்டுப்பகுதியில் சுக்தி ஆறு ஓடுகின்றது. நேற்று முன்தினம் மாலை பொதுமக்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் அந்த பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தனர். மழை காரணமாக ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ஆற்றங்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 14 கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் அருகில் உள்ள காட்டில் உயரமான இடங்களுக்கு சென்று உயிர் தப்பினர்.