அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரம்...ஓபிஎஸ் மேல்முறையீடு..:ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே முறையிடப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், அதிமுக அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ்ஸிடன் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து, ஒ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்தநிலையில், ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கில் தங்கள் விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: