ஆம்ஸ்டரடாம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த காவல் உதவிஆய்வாளர் சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். நெதர்லாந்தில் காவலர்களுக்கான சர்வதேச தடகள போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 5 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் பங்கேற்று வெற்றிப்பெற்றுள்ளார். முதலில் இலக்கை அடைந்து தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கிருஷ்ணமூர்த்தியை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். இவர் ஏற்கனவே மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். நெதர்லாந்து சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 12 பேர் கொண்ட காவலர் குழுவினர் வருகின்ற 12ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.