* செங்கல்பட்டு ஜிஎல்எல் விளையாட்டு கிளப் சார்பில் நடைபெற்ற 3வது பெண்கள் கபடி போட்டியில், சென்னையை சேர்ந்த செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகளம், குத்துச்சண்டை, நீச்சல் என அனைத்து விளையாட்டுகளுக்குமான கோடைக்கால பயிற்சி முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கின்றன. இது குறித்து விவரங்கள், தொடர்பு எண்களை அறிய: www.sdat.tn.gov.in மேலும், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளவும். சென்னை: 7401703469.
* பாரிஸ் ஒலிம்பிக் படகு போட்டியில் பங்கேற்க இந்தியாவின் நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், பிரான்சில் பெற்றோருடன் தங்கியிருந்த நேத்ரா நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். இங்கு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ள நேத்ராவை தமிழ்நாடு படகு போட்டி சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.