பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்ற ‘பேட்ச் ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ்’ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரரும், தேசிய சாம்பியனுமான வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் உள்ளூர் நட்சத்திரம் மெல்வில் ஸ்சியல்மனிகோவுடன் மோதிய வேலவன் 11-6, 11-9, 11-6 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வேலவன் வென்ற 8வது சர்வதேச சாம்பியன் பட்டம் இது.

The post பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: