இபிஎஸ் தலைமையில் ஒன்றுபட்டு உள்ளது நானும் ஒருநாள் அதிமுகவுக்கு தலைமை தாங்கலாம்: மாஜி அமைச்சர் காமராஜ் பேட்டி

தஞ்சாவூர்: இபிஎஸ் தலைமையில் ஒன்றுபட்டு உள்ள அதிமுகவிற்கு நானும் ஒரு நாள் தலைமை தாங்கலாம் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி:  அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொண்டர்களால் அவர் தேர்வு செய்யப்பட்டு இன்னும் 3 மாதங்களில் பொதுச் செயலாளராக வருவார். அதிமுகவை பொறுத்தவரை யாரையும் நம்பி இருக்கிற இயக்கமல்ல. தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம். பெரும்பாலான தொண்டர்கள் இபிஎஸ் பக்கம்தான் உள்ளனர். இபிஎஸ் தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு உள்ளது. இதே போல் அதிமுகவிற்கு நானும் ஒரு நாள் தலைமை தாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: