திருவள்ளூர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் பரணி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று அஸ்வினி உடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையிலேயே மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.