பாட்னா: பீகாரில் நாகபஞ்சமியை முன்னிட்டு பாம்பு திருவிழா வினோதமான முறையில் கொண்டாடப்பட்டது. பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள காளி கோயிலில் நாகபஞ்சமியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இதில் அந்த மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பாம்பாட்டிகள் கலந்து கொண்டனர். நாகபஞ்சமியை முன்னிட்டு ஒன்றாக கூடும் பாம்பாட்டிகளும், கிராம மக்களும் ஆற்றில் இறங்கி, மீன்பிடிப்பதை போல ஆர்வமுடன் பாம்புகளை பிடித்தனர். கைகளிலும், தலையிலும், கழுத்திலும் உயிருடன் உள்ள பாம்புகளை சுற்றிக்கொண்டு, மேளதாளமுடன் ஊர்வலமாக சென்றனர். வயது பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாம்புகளுடன் கோயிலை நோக்கி அணிவகுத்து சென்றதை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்தனர்.