டார்ஜிலிங்: டார்ஜிலிங் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாலையோர கடையில் பானி பூரி தயாரித்து குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிக்கு வழங்கினார். கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் டார்ஜிலிங் சென்றார். நேற்று காலை நேபாளி கவிஞர் பானுபக்தா ஆச்சார்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். டார்ஜிலிங் மலையில் நேற்று அவர் நடை பயணமாக, சண்டே ஹாட் எனப்படும் சுய உதவி குழுவின் பெண்களால் நடத்தப்படும் உணவு கடைக்கு சென்றார்.