புதுடெல்லி: நாட்டில் தங்கம் இறக்குமதி திடீரென அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே மே மாதம் 13 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த மே மாதம் தங்கம் இறக்குமதி 677 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று அளி்தத பேட்டியில், ``இந்தியாவில் அதிகளவிலான தங்கம் கிடைப்பதில்லை என்பதால் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுகிறது.