டெல்லி: மும்பையில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் சிகான் -பத்ரா இணைப்பு சாலை, தாதர் ரீடி பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று காலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.