டெல்லி: அதிக கவனம் செலுத்தி MSME துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். டெல்லியில் 2022ம் ஆண்டுக்காக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பேசினார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த திட்டம் வகுத்து வேலைவாய்ப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அப்போது தெரிவித்தார்.