பாலக்காடு: பாலக்காடு அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அடுத்துள்ள காராக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அவிநாஷ் (30). இவர் பெங்களூரூ விமான நிலையம் அருகே உள்ள உணவு டெலிவரி கம்பெனியில் பணியாற்றினார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கோவை புலியகுளத்தை சேர்ந்த ரவிசரண் என்பவரது மகள் தீபிகா (28)வை திருமணம் செய்தார். தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவிநாஷ் வேலையை விட்டு நின்று வீட்டில் கடந்த 2 மாதமாக சும்மா இருந்துள்ளார்.