சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 624 பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முககவசத்தை தமிழக அரசு கட்டாயப்படுத்தியிருக்கிறது.