சிறுவன் தண்ணீர் குடித்ததில் தகராறு இருபிரிவினர் பயங்கர மோதல்-விஜயநகரம் மாவட்டத்தில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் சிறுவன் தண்ணீர் குடித்த தகராறில் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் நெல்லிமர்லா மண்டலம் மால்யடா கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆழ்துளை குழாயில்  தண்ணீர் குடித்ததால் சிறுவனை தாக்கியதாகவும், அதனால் பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும் இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக  போலீசார் கூறுகின்றனர்.  

மலையடா கிராமத்தில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்ட இந்த மோதலில் 8 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்களை போலீசார் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இருப்பினும், சமீபத்தில் நடந்த கலப்பு திருமணமும் இந்த மோதலுக்கு  ஒரு காரணம் என்றும்,  தசரா பண்டிகையின் போது, ​​பழைய பகையை மனதில் வைத்து பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலின மக்கள் மீது  தாக்குதல் நடத்தியதாக, கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க  கிராமத்தில் அமைதியை கொண்டுவர போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீசார் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: