திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தியும் பாஜவின் பி-டீம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவருமான ராகுல்காந்தி பாஜவின் பி-டீம் போன்று செயல்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியானது திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றது. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாதச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் ஆதரவை அவர்கள் நாடுகின்றனர்.
சிபிஎம்(சிபிஐ-எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, வகுப்புவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்த குழுவின் ஆதரவையும் நாடுவதில்லை. சபரிமலை தங்க இழப்பு விவகாரம் தொடர்பான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வருகின்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இதற்கு மாறாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், நீதிமன்றம் இந்த விசாரணையில் எந்த குறையையும் காணவில்லை” என்றார்.
