பந்தலூர்: முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலய பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, கடமான்கள், காட்டு மாடுகள் உள்ளிடட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில், கோடை காலங்களில் கடும் வறட்சி நிலவி வந்தது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கின்றது. இதனால், யானைகள் மற்றும் மான்கள் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக உணவு தேடி வருகின்றது.