நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து 194 கனஅடியாக இருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நேற்று மாலை நீர் வரத்து 1192 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி, பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.58 அடியாகவும், நீர் இருப்பு 3.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.