சின்னாளபட்டி : மைசூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மினி லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 546 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் மீது கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டிக்கு, மைசூரில் இருந்து லாரி மூலம் குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சரக்கு வாகனம் ஒன்று பஞ்சம்பட்டி பிரிவு வழியாக ஊருக்குள் சென்று, மாதா நகரில் உள்ள கடையில் குட்கா பண்டல்களை இறக்குவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், குட்காவுடன் மினி சரக்கு லாரியை கைப்பற்றினர்.