கிருஷ்ணகிரி:ருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், இன்று (22ம் தேதி) மாலை 6 மணிக்கு 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் துவக்க விழா நடைபெறுகிறது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகிக்கிறார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். வேளாண்மை துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் வரவேற்கிறார். இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்று, மாங்கனி கண்காட்சியினை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகின்றனர்.