சென்னை: சென்னையில் வருகிற 2ம் தேதி நடக்கும் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு காயிதேமில்லத் விருது வழங்கப்படும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக இந்த ஆண்டுக்கான (2022) விருதுகளை பெறும் ஆளுமைகளை தேர்ந்தெடுக்க விருதாளர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காயிதே மில்லத் விருது மதிமுக பொது செயலாளர் வைகோ, தந்தை பெரியார் விருது-பேராசிரியர் பிரபா கல்வி மணி, டாக்டர் அம்பேத்கர் விருது-மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்.