ஒரத்தூர் கிராமத்தில் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தூர், பெரிய காலனி, அம்மணம்பாக்கம், ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 560 மாணவ, மாணவிகள் நீலமங்கலம், கூடுவாஞ்சேரி, ஆத்தனஞ்சேரி, படப்பை ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். தற்போது, இந்த ஆண்டு கல்வி பயிலும் ஒரத்தூர் ஊராட்சியை சேர்ந்த 560 மாணவர்களுக்கு, ஒரத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் என்.டி.ஜே. மாணிக்கராஜ் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கினார். மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேராக சென்று, மாணவர்களின் கல்வி அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, ஒரத்தூர் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: