கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு, எஸ்.கைக்காட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாலை நேரம் மற்றும் இரவு முழுவதும் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கட்டபெட்டு மற்றும் எஸ்.கைக்காட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அதிரடி சோதனை நடத்தினர்.