திராவிட கொள்கையை பின்பற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமரசமின்றி செயல்படுகிறார்: திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி: திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்திற்கு பொற்காலம் என்றும், திராவிட கொள்கையை பின்பற்றுவதில் சமரசமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் திருச்சியில் வைகோ தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம். திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினும், தி.மு.கவும் உறுதியோடு இருக்கிறது. தி.மு.க அரசின் ஓராண்டு கால ஆட்சிக்கும், பா.ஜ.வின் 8 ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. திமுகவின் ஓராண்டு ஆட்சியை மலை என்று கூறினால், பா.ஜ.வின் 8 ஆண்டு ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: