புதுடெல்லி: ‘காலணிகளுக்கான தரக்குறியீடுகளை வரும் 2023ம் ஆண்டு ஜூலை முதல் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்,’ என ஒன்றிய அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஷூ, செருப்பு, உள்ளிட்ட மொத்தம் 13 வகையிலான காலணிகளுக்கு ஐ.எஸ் தர சான்றிதழ் வகுக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2023ம் ஆண்டு, ஜூலை முதல் தேதி முதல் கட்டாயம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.