ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் நண்பர் ஆர்.இளங்கோவன் நீக்கம்

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் நண்பர் ஆர்.இளங்கோவன் ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.இளங்கோவன், (இவர் ஏற்கனவே வகித்து வரும் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்)ஓமலூர் மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மணி எம்எல்ஏ ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் ஆர்.மணி (ஓமலூர் எம்எல்ஏ) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதில் ஆர்.இளங்கோவன், எடப்பாடி பழனிசாமியின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: