ரயில் புறப்பட தாமதமானதால் குத்தாட்டம் போட்டு பயணிகள் மகிழ்ச்சி: வாழ்த்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர்

ரத்லம்: மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் ரயில் நிலையத்திற்கு பாந்த்ரா - ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. இந்த ரயில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக நடைமேடையை அடைந்தது. அதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையடுத்து ரயில் பெட்டியில் இருந்த சில பயணிகள், நடைமேடைக்கு வந்தனர். அவர்கள் திடீரென தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கர்பா டான்ஸ் ஆடினர்.

முதலில் ஒரு சிலர் மட்டும் ஆட்டம் போட்ட நிலையில், பின்னர் பலரும் சேர்ந்து ஆடினர். ரயில் புறப்பட்டதும், அனைவரும் ரயிலில் ஏறி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மகிழ்ச்சியான பயணம்! இனிய பயணம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகர்ந்து வருகின்றனர்.

Related Stories: