போபால்: மத்திய பிரதேசத்தில் தொழிலதிபரின் காரை சேதப்படுத்தி போதையில் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் ரோஹ்தாஷ் சிங் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். மத்திய பிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஹுக்கும் சிங் கரடாவின் மகன் ரோஹ்தாஷ் சிங், போபால் - இந்தூர் நெடுஞ்சாலையில் காரில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கார் மீது அவரது கார் மோதியது. அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், காரை சரியாக ஓட்டிச் செல்லும்படி ரோஹ்தாஷ் சிங்கிடம் கூறியுள்ளனர். ஆனால் போதையில் இருந்த ரோஹ்தாஷ் சிங், தொழிலதிபரின் காரை தாக்கினார். காரின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.