புதுடெல்லி: பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவில் உள்ள ரயில் தண்டவாளங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக, ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. முக்கியமாக பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள ரயில் பாதைகளை தகர்க்க ஐஎஸ்ஐ திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து உளவுத்துறை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.