வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு..!!

டெல்லி: வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ் பூஷண் மீதான 5 வழக்குகளில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. பிரஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த போது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: