நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் ரிஷியூர் கிராமத்தில் இயற்கை வேளாண் மையத்தில் இயற்கை முறையில் 10 ஏக்கர் அளவில் சாகுபடி செய்த எள் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. ரிஷியூர் இயற்கை வேளாண் மற்றும் ஒருங்கிணைந்த மையத்தில் இயற்கை முறையில் சுமார் 17 ஏக்கரில் (மாசிப் பட்டம் 10 ஏக்கர், சித்திரைப் பட்டம் 7 ஏக்கர்) எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரும்புச்சத்து நிறைந்த நமது பாரம்பரிய உணவில் எள் முக்கியமானதாகும்.