சத்தியமங்கலம்: கும்பகோணத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம்- கோபிசெட்டிப்பாளையம் சாலையில் அரியப்பம்பாளையம் அருகே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.