புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆணையம், கூடுதலாக 7 தொகுதிகளை உருவாக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நகரை சேர்ந்த 2 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், அசாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது.