திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலம் மைசூரு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஷாபா செரீப் (60). நாட்டு வைத்தியர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூரு போலீசில் புகார் செய்திருந்தனர். இந்த நிலையில் வைத்தியர் ஷாபா செரீப்பை கேரள மாநிலம் நிலம்பூரை சேர்ந்த தொழிலதிபரான ஷைபின் அஷ்ரப் என்பவரின் தலைமையிலான கும்பல் கடத்திக் கொலை செய்தது தெரியவந்தது. வைத்தியர் ஷாபா செரீபை ஷைபின் அஷ்ரப் மைசூருவில் இருந்து கடத்தி தனது வீட்டில் 15 மாதம் அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி உள்ளனர். நாட்டு வைத்தியரான ஷாபா செரீப்பின் வைத்திய ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காகவே இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டார் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.