பாட்னா: பீகாரில் ரூ.1,710 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததற்கு காற்றும், மூடுபனியும் காரணம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறியதற்கு, அமைச்சர் நிதின் கட்கரி வேதனை அடைந்தார். பீகார் மாநிலம் சுல்தங்கஞ்ச் மற்றும் அகுமானி காட் இடையே கங்கை நதியின் மேல் பாலம் கட்டும் பணி 2014ல் துவங்கியது. ரூ. 1,710 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம், கடந்த ஏப்ரல் 29ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பாலம் விபத்து குறித்து ஒன்றிய அமைச்சரர் நிதின் கட்கரி கூறுகையில், ‘இடிந்து விழுந்த பாலத்திற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமான பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும்.