சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25), தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து 12 மணி அளவில் பாரிமுனை ராஜாஜி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திக் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து கார்த்திக் வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெகன்நாதனிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்கள் பைக்கில் வேகமாக சென்று தீவுத் திடல் அருகே பைக்கில் திரும்பியபோது, சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்துள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.