பெரும்பாறை மலைச்சாலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் சங்கு பூக்கள்

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறையிலிருந்து தாண்டிக்குடி செல்லும் மலைச்சாலையின் இருபுறமும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக சங்குப்பூக்கள் சாலையின் இருபுறமும் பூத்துக்குலுங்குகின்றன. தற்போது இம்மலைப் பகுதிகளில் மழை பெய்து வரும் காரணத்தினால் அதிகளவில் சங்கு பூக்கள் பூத்துள்ளன.

இதனை இம்மலைச் சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்போனில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மழைக்காலத்தில் அதிகளவில் பூக்கும் இந்த சங்குப்பூக்கள், தற்போது கோடை மழை பெய்ததால் பூத்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: