நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி என்னும் பகுதியில் கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கொடநாடு வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கை மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்து வந்தார்.