புதுடெல்லி: ‘உபா’ சட்டத்தின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்ந்த ஏழு தீவிரவாதிகளின் பெயரை உள்துறை அமைச்சகம் சேர்த்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த முடிவால் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் குல், ஆஷிக் அகமது நெங்ரூ, முஷ்டாக் அகமது சர்கார், அர்ஜுமந்த் குல்சார் ஜான், அலி காஷிப் ஜான், மொகிதீன் அவுரங்கசீப் ஆலம்கிர், ஹபீஸ் தல்ஹா சயீத் ஆகிய ஏழு தீவிரவாதிகள் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ-உபா) கீழ் பட்டியலிட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர்கள் உபா பட்டியலில் சேர்க்கப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.