திருமங்கலம் அருகே போதை தகராறில் லோடுமேன் குத்தி கொலை-நண்பர்கள் கைது

திருமங்கலம் : திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு மின்வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அய்யம்பாண்டி (21). லோடுமேன். இவரது நண்பர்கள் முனாண்டிபட்டியை சேர்ந்த சசி (24), கருவாயன் (எ) வசந்த் (22). இவர்கள் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை அய்யம்பாண்டி, சசி, வசந்த் ஆகியோர் தோப்பூர் துணைகோள் நகர் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்குள் வாய்தகராறு எழுந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யம்பாண்டி கூத்தியார்குண்டு சந்திப்பில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு வந்த சசி, வசந்த் அய்யம்பாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சசி அய்யம்பாண்டியை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் இருவரும் தப்பி விட்டனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய அய்யம்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை ஜிஹெச்சில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அய்யம்பாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய சசி, வசந்த்தை நேற்றிரவு ஆஸ்டின்பட்டி பகுதியில் கைது செய்தனர்.  சம்பவ இடத்தை எஸ்பி பாஸ்கரன் பார்வையிட்டார். குடிபோதையில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: