திருச்சி: சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து நேர்த்தி கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் நேற்று கோயிலின் மண்டபத்தில் எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் ரூ.1,15,84,493 ரொக்கமும், 2.465 கிலோ தங்கமும், 3 கிலோ 545 கிராம் வெள்ளியும், 99 வெளிநாட்டு நோட்டுகளும் இருந்தது.