“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே” என புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”

“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!”

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: