திருச்சியில் மே 5ம் தேதி வணிகர்கள் விடியல் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

முசிறி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் நேற்று அளித்த பேட்டியில் திருச்சியில் மே 5ம் தேதி வணிகர் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். வணிகர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கும், உயர்த்துவதற்கும், தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மாநாடு நடைபெறும் அன்று அனைத்து வியாபாரிகளும் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: