திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியாகாதர்பாஷா (27). கூலி தொழிலாளி. இவரின் மனைவி காஞ்சனா (25). இவர்கள் கடந்த 2 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனாவுக்கு நேற்றிரவு 11 மணி அளவில், பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக தயாராக இருந்தது. வீட்டில் இருந்து ஆம்புலன்சில் ஏறுவதற்கு வெளியே வரும்போது காஞ்சனாவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.