தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் எமிஸ் தளம் வழியாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்க இறுதி முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 175 வரையில் இடம் பெற்றிருந்த அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்களில் 174 தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில், முன்னுரிமையின்படி 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கான பணியேற்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு appeared first on Dinakaran.